பஞ்சாயத்து...


என்ன கண்ணுகளா, மேலுகாலு எல்லாஞ் சொகமா? ஆமா, அதென்ன?

ராசா மாதிரி இருந்த மனுஷன மகளிர் அணி, மண்ணாங்கட்டி அணின்னு சொல்லி சண்ட போட்டு ஒரேடியா பிச்சிப் போட்டுடீய??


எவ அவ, பொன்ச்சா பூன்ச்சா!! பேரே வாயிலயே நுழையல.. மொகத்தையும் முழியையும் பாரு, நல்லா இஞ்சி தின்ன கொரங்காட்டமா!!! ஒழுங்கா வந்தோமா, யான மேல ஏறி ஊரச் சுத்தி வந்தமா அண்ணனப் பத்தி நாலு நல்ல வார்த்த சொன்னமான்னு இருக்காம, மகளிர் அணித் தலவியாம், கொள்கை பரப்புச் செயலாளராம் என்னல்லாம் கேக்குறாளுவ!!!!



அடுத்தது யாரு? என்ன பேரு சொன்ன? பலமா சொல்லு அம்மணி, பேரக் கூட சத்தமா சொல்ல வரல.. வந்துட்டாக, தலவி பதவிக்கு!!
என்ன, கீதாவா?!! உனக்கு என்ன புள்ள வேணும்? தலவி கொளவி எல்லாம் கெடைக்காது, அதுக்குதே நான் இருக்கேன்ல... என் ராசா கட்சிக்கு நாந்தே தல தெரியுதா? மருவாதியா ராயபுரத்துக்கு போனமா ஓட்டு கேட்டமான்னு இருக்கோணும், ஆமா சொல்லிட்டேன்

இது என்னா வலையடியா கொழாயடியா? எல்லாம் பொத்திகிட்டு நல்லபடியா கட்சி வேலைய பாக்கணும் தெரியுதா?

தம்பி தேவு, இதுங்க கிட்ட கத்தி கத்தி உசிரே போச்சு, அண்ணிக்கு ஒரு பன்னீர் சோடா எடுத்தா... ஸ்... அப்பா...

1மறுமொழிகள்:

Mon May 01, 03:12:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger Geetha Sambasivam

நல்ல வேளை, இவ்வளவு கூக்குரல் போட்டும் யாருமே கவனிக்கலை, அப்படியே அமுக்கிட மாட்டேன்?

 

Post a Comment

<< முகப்பு